மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் உலா; பக்தர்கள் பக்தி பரவச்ம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2024 09:03
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று நடந்த அறுபத்து மூவர் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா 16ம்தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் 7ம் நாளான 22ம் தேதி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு வீதி உலா நடைபெற்றது. 25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.