சிவகாசி; சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மறுநாள் கயர் குத்து திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.