தஞ்சாவூர்; முருகனின் ஆறுபடை வீடுகளுள் 4வது படை வீடாக, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் திகழ்கிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இந்த கோவில் குரு உபதேச தலம் எனச்சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் கொண்ட தேவதைகள் பெயர்களுடன் 60 படிகளில் அமர்ந்து சுவாமிநாதருக்கு சேவை செய்து வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது 60 படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.