Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா ... கோபாலா... கோஷத்துடன் தங்க ... மண்டூக மகாமுனிக்கு வரமளித்த வடமதுரைசவுந்தரரராஜப் பெருமாள் மண்டூக மகாமுனிக்கு வரமளித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சை பட்டுடுத்தி சாத்துார் வைப்பாற்றில் இறங்கிய கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பச்சை பட்டுடுத்தி சாத்துார் வைப்பாற்றில் இறங்கிய கள்ளழகர்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
03:04

சாத்துார்; சாத்துாரில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கினார். பெரிய கொல்லப்பட்டியில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து கள்ளழகராக பெருமாள் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கி பெரிய கொல்ல ப்பட்டியை அடைவார். அங்கு இரவு முக்கிய வீதிகள் வலம் வரும் சுவாமி பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஏற்று பின்னர் இரவு வைப்பாற்றில் நடைபெறும் வானவேடிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். சித்ரா பெளர்ணமி முன்னிட்டு இன்று அதிகாலையில் சுவாமி சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. பின்னர் குதிரை வாகனத்தில் வீற்றிருந்த சுவாமியை பெரிய கொல்லப்பட்டி பொது மக்கள் நான்கு ரத வீதி வழியாக வலம் வரச் செய்தனர். அப்போது பொதுமக்கள் நேர்த்திக்கடனாக வத்தல்,வெங்காயம், பருத்தி, உள்ளிட்ட தானியங்களை வீசி வழிப்பட்டனர். பலர் கற்கண்டு சாதம் தானம் வழங்கினர். பின்னர் மதியம் 11:35 மணிக்கு சுவாமி வைப்பாற்றில் எழுந்தருளினார். அங்கு மருத்துவ குல சங்கம் சார்பில் அமைத்திருந்த திருக்கண்ணில் வீற்றிருந்து பக்தர் செலுத்திய முடி காணிக்கை,தூப தீபத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் 1:00 மணிக்கு சுவாமி பெரிய கொல்லப்பட்டி கோயிலை சென்றடைந்தார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பலர் அன்னதானம், மோர், ரஸ்னா, பானக் கரம் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினர். டி.எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar