Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கல்லறை திருநாள்: இது ஒரு நித்திரை ... என் பிறவிப் பயனை அடைந்தேன்: துறவியான இளம்பெண் நெகிழ்ச்சி! என் பிறவிப் பயனை அடைந்தேன்: துறவியான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடுதல் லட்டுக்கு திருமலையில் கட்டுப்பாடு: ஒருவருக்கு இனி 4 மட்டுமே!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 நவ
2012
10:11

நகரி: திருமலையில், கூடுதல் லட்டுகள் பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஒருவருக்கு நான்கு லட்டுகள் மட்டுமே வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை வெங்கடாஜலபதி கோவிலில், சாமி தரிசனம் செய்யும் பக்தர் ஒருவருக்கு, இரண்டு லட்டு வீதம் வழங்கப்படுகிறது. வி.ஐ.பி., தரிசனம், ஆர்ஜித சேவை, 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், 50 ரூபாய் கட்டண தரிசனம் செய்பவர்களுக்கு, இரண்டு லட்டுகள் வழங்கப்படுகிறது. இவர்களில், கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு, கோவிலுக்கு வெளியே, தெப்பக்குளம் அருகே, தனி கவுன்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்டு, 25 ரூபாய் வீதம், 100 ரூபாய்க்கு, நான்கு லட்டுகளுக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கோவிலுக்கு செல்லாத பக்தர்களும், பணம் செலுத்தி, இந்த டோக்கனை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. பின், லட்டு கவுன்டரில் கொடுத்து, லட்டு பெற வசதி செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனத்திற்கு சென்று வரும் பக்தர்கள் சிலர், தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவதற்கென, லட்டு கவுன்டர்களுக்கு திரும்ப திரும்ப சென்று, அதிக எண்ணிக்கையில் லட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இதே போல் தரகர்கள் சிலர், திரும்ப திரும்ப லட்டு கவுன்டர்களுக்கு சென்று லட்டுகளை வாங்கி, கூடுதல் விலைக்கு, விற்று பணம் சம்பாதித்தனர். இதனால், உண்மையான பக்தர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து பக்தர்கள், தேவஸ்தான நிர்வாகத்திடம் புகார் கூறினர். இதையடுத்து, நேற்று முன்தினம் தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு,திருமலையில், லட்டு கவுன்டர்களுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, கூடுதல் லட்டு கவுன்டர் அருகே சிலர், திரும்ப திரும்ப வந்து லட்டு டோக்கன்களை வாங்கிச் செல்வதைக் கண்டார்.இதை தடுக்க, புதிய சாப்ட்வேர் முறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், லட்டு டோக்கன் வாங்க வரும் பக்தர்களின் கைரேகை பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படும். இதனால் ஒருவருக்கு, ஒரு நாளுக்கு, நான்கு லட்டுகள் பெற்றுக் கொள்வதற்கான ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்னும் இரண்டு வாரங்களில், அமல்படுத்தப்பட உள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar