Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி கும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் 42ம் ... கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவிற்கு குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம் கொப்புடையநாயகி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம சுற்றுலா விற்கு தகுதிபெறுமா திருவேடகம்
எழுத்தின் அளவு:
கிராம சுற்றுலா விற்கு தகுதிபெறுமா திருவேடகம்

பதிவு செய்த நாள்

10 மே
2024
12:05

மதுரை: பழமையும் பாரம்பரியமும் மிக்க திருவேடகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கிராம சுற்றுலாவாக சுற்றுலாத்துறை அறிவிக்க வேண்டும்.

சோழவந்தான் செல்லும் வழியில் உள்ளது திருவேடகம். இங்குள்ள திருவேடகநாதர் சிவன் கோயிலுக்கு 7ம் நுாற்றாண்டில் திருஞானசம்பந்தர் தரிசித்து பாடல் பாடியுள்ளார். மதுரையில் நடந்த சமயப் போரில் பாடல் எழுதிய ஏடுகளை திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட போது ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து திருவேடகத்தில் கரைசேர்ந்த பெருமையுடையது. தவிர மூல வைகையில் இருந்து கிழக்கு மேற்காக பயணிக்கும் வைகையாறு சோழவந்தான் வரும் போது திருவேடகத்தில் வடக்கு தெற்காக காசியில் இருப்பதைப் போன்று பயணித்து மீண்டும் மேலக்கால் பகுதியில் கிழக்கு மேற்காக செல்கிறது.

இத்தனை பெருமை வாய்ந்த திருவேடகத்தில் திருவேடகநாதர் கோயில், ஆற்றின் கரையில் திருவேடக படித்துறைகள் உள்ளன. படித்துறையில் சிவன், பார்வதி ரிஷப வாகனத்தில் அமர்ந்த கோலத்திலும் தனியாக விநாயகர், முருகன் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. நுாறடி அகலமுள்ள படிக்கட்டின் ஒரு பகுதி சேதமடைந்து ஆற்றில் இறங்கியுள்ளது. மக்கள் அதை பயன்படுத்த முடியவில்லை. தவிரவும் குப்பை கொட்டும் இடமாக்கி வருகின்றனர். இங்கு அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. படித்துறையில் குடிநீர், கழிப்பிடம், குளியலறை, உடை மாற்றும் அறை என எந்த வசதியும் இல்லை. சிலர் உடைகளை களைந்து அப்படியே வீசி செல்கின்றனர். பெருமை வாய்ந்த படித்துறையை ஒட்டி தடுப்பணை அமைத்தால் மக்கள் குளித்துச் செல்ல முடியும். இந்த இடத்தை கிராம சுற்றுலா தலமாக்கினால் உள்ளூர், வெளிமாநில, வெளிநாட்டு பயணிகளும் பயன்பெற முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (20ம் தேதி) ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் ... மேலும்
 
temple news
சென்னை; மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக ... மேலும்
 
temple news
பல்லடம்; அப்டேட் செய்யப்படாத அறநிலையத்துறை இணையதளத்தால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar