நாகம்மாள் கோயில் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2024 02:05
மேலுார்; கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.23 முகூர்த்தகால் ஊன்றி காப்பு கட்டி பக்தர்கள் விரதமிருந்தனர். மே 9 பூ தட்டு திருவிழாவும், திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று (மே 10) பவ்வாத்தாள் குளத்தில் இருந்து பக்தர்கள் புனித நீராடி பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நாளை (மே 11) கிடா வெட்டி பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.