தரிசனம் செய்யுங்க.. வீடியோ எடுக்காதீங்க.. கேதார்நாத், பத்ரிநாத், கோவில்களில் வீடியோ எடுக்க தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2024 01:05
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களில் வீடியோ எடுக்க தடை விதித்தது உத்தராகண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவில்களுக்குள் மக்கள் ரீல் தயாரிப்பதால் ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், சார் தாம் பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் இருந்து 50 மீட்டர் சுற்றளவுக்குள் யாத்ரீகர்கள் வீடியோக்களை படம்பிடிக்கவும், சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது.
உத்தரகாண்டில் உள்ள புனித சார் தாம் யாத்திரைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது, கோயில் வளாகத்தில் மக்கள் ரீல் செய்யும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. எனவே, அனைத்து பக்தர்களுக்கும் மென்மையான மற்றும் மரியாதைக்குரிய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உத்தரகாண்ட் அரசு புதிய வழிகாட்டுதலை அமல்படுத்தியுள்ளது. கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களில் உள்ள கோவில் வளாகத்தின் 50 மீட்டர் சுற்றளவுக்குள் யாத்ரீகர்கள் இனி வீடியோக்களை எடுக்கவோ அல்லது ரீல்களை உருவாக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராதா ரதுரி தெரிவித்துள்ளார்.