பதிவு செய்த நாள்
17
மே
2024
01:05
திருப்பதி; திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜசுவாமியின் வருடாந்திர பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கருட துவஜபதம் ஏற்றுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துவக்க நாளான நேற்று, கோவிலில் மூலவரான கோவிந்தராஜ சுவாமிக்கு, அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள், ஆராதனை செய்தனர். பின், காலையில் பல்லக்கு சேவையிலும், மாலை ஊஞ்சல் சேவையிலும், சுவாமி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7 மணிக்கு, சுவாமி உபதேவியருடன், பெரிய சேஷ வாகனத்தில் உற்சவராக, திருப்பதி மாட வீதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.