Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசை., முத்தாரம்மன் கோயிலில் ரூ.28,59,275 ... பழநிக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள் பழநிக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 மே
2024
03:05

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை முன்னிட்டு திருத்தளிநாதருக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா மே 13ங் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி வெள்ளிக்கேடகம் அல்லது வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. இன்று ஐந்தாம் திருநாளில் சோழிய வெள்ளாளர் உறவின்முறையார் மண்டகப்படியார் சார்பில் திருக்கல்யாணம் நடந்தது. கோயிலிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு சிவகாமி அம்பாள் பெண் அழைப்பாக  திருவீதி புறப்பாடாகி மேலத்திருத்தளிநாதர் கோயில் எழுந்தருளினார். தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பாக திருத்தளிநாதர் திருவீதி வலம் வந்து மேலத்திருத்தளிநாதர் கோயில் எழுந்தருளினார். பின்னர் மணமக்கள் புறப்பாடாகி பெரியகோயில் வந்து ராஜகோபுரத்தின் கீழ் மாலை மாற்றினர்.  தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் வஸ்திரம் மாற்றி மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் யாகசாலை பூஜைகளை கணேசக்குருக்கள் துவக்கினார். பின்னர் ஸ்தானீகர் பாஸ்கர் குருக்கள்,ரமேஷ் குருக்கள் ஆகியோர் திருமண சடங்களை நடத்த, வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க திருத்தளிநாதருக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் காலை 10:25 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது.  திரளாக பெண்கள் பங்கேற்று திருக்கல்யாணத்தை தரிசித்தனர். பின்னர் திருமுருகன் மண்டபத்தில் திருமண விருந்து நடந்தது. முன்னதாக தென்மாப்பட்டு வேலாயுத சுவாமி கோயில் மடத்திலிருந்து கல்யாண சீர்வரிசைகளை பக்தர்கள் எடுத்து வந்தனர். இரவில் பூப்பல்லக்கில் சுவாமி,அம்பாள் எழுந்தருளி திருவீதி வலம் வந்தனர். நாளை சிறுகூடல்பட்டி மு.பழ. வகையறா மண்டபடி தீபாராதனையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். மே 21ல் தேரோட்டமும், மே22 ல் தெப்ப விழாவும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். இந்த நாளில் தான் ... மேலும்
 
temple news
சிவகங்கை; காளையார்கோவில் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழாவை முன்னிட்டு சனீஸ்வரபகவான் தங்க காக ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி சிலையப்பன் வலசையில் உள்ள பாலமுருகன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் மாம்பழ பூஜை மற்றும் வைகாசி உற்சவ விழாவில் கற்பூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar