வேம்பார்பட்டியில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 10:05
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
கோபால்பட்டி வேம்பார்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த மே 14 சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று உலக நன்மை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். விழாவில் இன்று அம்மனுக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நாளை அம்மன் அலங்கரித்து ஊர்வலம் அதனைத் தொடர்ந்து மாவிளக்கு, அக்கினி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.மே 23 மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.