வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் அலைகடலாய் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 10:05
திருச்செந்தூர்; வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடற்கரையில் அலை போல் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.