வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 02:05
புதுச்சேரி; வேதபுரீஸ்வரர் கோவில் 38 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி, காந்தி விதி வேதபுரீஸ்வரர் கோவில் 38 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதை தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுக்குப்பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.