வைகாசி விசாகம் : போடி சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 04:05
போடி; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று முருகன். வள்ளி, தெய்வாணைக்கு தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். நேற்று காலை பால தண்டாயுதபாணி பாதயாத்திரை குழுவினர் மூலம் இரட்டை வாய்க்கால் விநாயகர் கோயிலில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். அதன்பின் முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் முருகன், வள்ளி தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர். திருப்புகழ் சபை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.