Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி அம்மன் கோவிலில் ஆதிசங்கரர் ... அயோத்தி ராமருக்கு வெள்ளி வில், அம்பு காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு பூஜை அயோத்தி ராமருக்கு வெள்ளி வில், அம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
05:05

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவம், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை மங்களகிரி விமான புறப்பாடு நடந்தது. இரவு, வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான, வைகாசி விசாகமான இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியறை பூஜைகள், பின்னர், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, காப்பு களைதல் நிகழ்வு நடந்தது. காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதிஉலாவை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. காலை 11:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி, மகா பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

கல்யாண விருந்து; திருக்கல்யாணத்தை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவில் அன்னதானக் கூடத்தில், 750 பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் இரவு கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. தொடர்ந்து மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

மொய் எழுதலாம் வாங்க; முருகப்பெருமானுக்கு, திருக்கல்யாணம் முடிந்ததும் மொய் எழுதும் வைபவம் நடக்கிறது. இதில், பக்தர்கள் 50, 100 ரூபாய் அதற்கு மேலும் மொய் எழுதலாம்.மொய் எழுதுவோருக்கு, திருமணத்தில் தாம்பூலப்பை தருவதுபோல சுவாமியின் பிரசாதமான மஞ்சள், குஞ்குமம், திருமாங்கல்யசரடு, வளையல் மற்றும் இனிப்பு ஆகியவை அடங்கிய மஞ்சள் பை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. சுவாமிக்கு,ஆன்-லைன் வாயிலாகவும் மொய் எழுதலாம். அதற்கு,

https://vadapalaniandavar.hrce.tn.gov.in/ticketing/service_collectionindex.php?tid=6&scode=21&sscode=1&target_type=1&group_id=4 என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar