திருப்பூர் கந்த பெருமான் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 10:05
அனுப்பர்பாளையம்; திருப்பூர் காலேஜ் ரோட்டில் புகழ் பெற்ற அருள்மிகு கொங்கணகிரி ஸ்ரீ கந்த பெருமான் கோவில் உள்ளது. கோவிலில், வைகாசி விசாகத்தை மூன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக மாலை 3:30 மணிக்கு கந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 5:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தோரோட்டத்தை போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், தொடங்கி வைத்தார். மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, பொருளாளர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோஹரோ கோஷமிட்டு தேரை கிரிவல பாதையில் இழுத்து சென்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கந்த பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.