அம்பாசமுத்திரம்; மன்னார்கோவில் பெரியநம்பி திருமாளிகையில் நரசிம்மர்அவதாரதின விழா நடந்தது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவிலில் பழமையான பெரியநம்பி திருமாளிகை உள்ளது. இம்மாளிகையில், நேற்று மாலை நரசிம்மர்அவதாரதின விழா நடந்தது. விசேஷ கும்ப பூஜையை தொடர்ந்து, நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதனை, இத்திருமாளிகையை, அலங்கரித்து வரும் ராமானுஜரின் வம்சாவளியான பெரியநம்பி நரசிம்ம கோபாலன் நடத்தினார். பானகம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில், கரூர் மாவட்டதலைமைநீதிபதி சண்முகசுந்தரம் உட்படதிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.