கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில் மகா பெரியவர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 12:05
புதுச்சேரி; கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா நாளை (24ம் தேதி)நடக்கிறது. புதுச்சேரி பிராமண சமூகம், ஸ்ரீ சாய் சங்கர பக்த சபா மற்றும் பரமாச்சாரியார்களின் பக்தர்கள் சார்பில், கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில், காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா,நாளை (24ம் தேதி)மாலை 4:30 மணிக்கு ஆவஹந்தி ஹோமத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜையும், புதுச்சேரி சீனுவாச பாகவதர் பஜனை நடக்கிறது. பஜனைக்கு பின்பு, காஞ்சி மகா பெரியவர் உருவப்படம் ஊர்வலம் நடக்கிறது. பூஜைகள் தொடர்பாக மேலும் தகவல் பெற 98423 27791, 98428 29770, 94863 65817 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம்.