மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 12:05
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அம்மனுக்கு 1,008 குடம் நீர், பால்அபிஷேகம் நடந்தது. வைகாசி விசாகம் மற்றும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் 12:00 வரையில், தேவி மாரியம்மனுக்கு 1,008 குடம் நீர் மற்றும் பால் அபிஷேகம் நடந்தது. இதில் உலக நன்மை பெறவும், நாட்டில் மழை வேண்டி சிறப்புஅபிஷேகம் நடந்தது. பெண்கள் மற்றும் ஆண்களே நேரடியாக அம்மனுக்குஅபிேஷகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.