திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 02:05
திருப்பதி ; திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு கோவிலில் மூலவரான கோவிந்தராஜ சுவாமிக்கு, அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள், ஆராதனை நடைபெற்றது. தினமும் காலையில் பல்லக்கு சேவையிலும், மாலை ஊஞ்சல் சேவையிலும், சுவாமி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. கோவிந்த கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.