Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவதிருப்பதி, நவகைலாய கோயில்கள் உள்ள ... செங்கல் சிவபார்வதி கோவிலில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் செங்கல் சிவபார்வதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூன் 1 முதல் திருமலையில் ஹனுமன் ஜெயந்தி விழா; பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஜூன் 1 முதல் திருமலையில் ஹனுமன் ஜெயந்தி விழா; பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 மே
2024
12:05

திருப்பதி; அஞ்சனாத்ரி ஆகாச கங்கா கோவிலில், ஜபாலி தீர்த்தத்தில் ஜூன் 1 முதல் 5 வரை அனுமன் ஜெயந்தியை கொண்டாட திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்த ஐந்து நாட்களும் ஆகாச கங்கையில் உள்ள ஸ்ரீ பாலஞ்சநேய சுவாமி மற்றும் ஸ்ரீ அஞ்சனாதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தவும், ஜபாலி தீர்த்தத்தில் கூட்டு அனுமன் சாலிசா பாராயணத்தை நடத்தவும் தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
 
ஆகாச கங்கையில் உள்ள அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆகாச கங்கையில் உள்ள ஸ்ரீ அஞ்சனாதேவி-ஸ்ரீ பாலஞ்சநேய சுவாமி கோவிலில் இந்த ஐந்து நாட்களும் காலை 8.30 மணி முதல் 10 மணி வரை அபிஷேகம் நடைபெறும். ஜூன் 1-ஆம் தேதி மல்லிகைப் பூக்களால் அபிஷேகம், ஜூன் 2-ஆம் தேதி வெற்றிலை, ஜூன் 3-ஆம் தேதி சிவப்பு குண்டர் மற்றும் கனகாம்பரம், ஜூன் 4-ஆம் தேதி வேப்பிலை, கடைசி நாளில் சிந்துரம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மந்திரங்கள் முழங்க வேத பண்டிதர்களால் ஸ்ரீ ஆஞ்சநேய சஹஸ்ர நாமார்ச்சனை மற்றும் அஞ்சனாதேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.  காலை 10 மணிக்கு ஆகாச கங்கையில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஜனன கதை நிகழ்ச்சி நடக்கிறது.

அனுமன் சாலிசா பாராயணம் தாச சாகித்ய திட்டத்தின் மூலம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்தப்படும். ஜூன் 1ல் ஹரிகதா, ஜூன் 2ல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்களின் சங்கீர்த்தனங்கள், ஜூன் 3ல் புரந்தரதாச சங்கீர்த்தனங்கள், ஜூன் 4ல் இந்து தர்ம பிரசார் பரிஷத்தின் பஜனை, ஜூன் 5ல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்களின் ஹரிகதா பாடல். தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை எஸ்.வி.சங்கீத் மற்றும் நிருத்யா கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நாத நீரஜனம் மேடையில் ஸ்ரீ அனுமனின் பிறப்பு மற்றும் ஸ்ரீ அனுமன் தொடர்பான சுவாரஸ்யமான தலைப்புகளில் புகழ்பெற்ற வேத பண்டிதர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar