காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2024 02:06
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடைபெறும் நித்ய அன்னதானத் திட்டத்திற்காக ரூ. 1,11,116 நன்கொடையாக ஐதராபாத்தைச் சேர்ந்த அகில் ரெட்டி குடும்பத்தினர் கோயில் அதிகாரிகளிடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு கோவில் கண்காணிப்பாளர் வாசு, கோவில் ஆய்வாளர் விக்னேஷ், ஆகியோர் சுவாமி தரிசனம் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளைச் செய்து கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். பின்னர் நன்கொடையாளருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.