காரைக்கால் மாங்கனி திருவிழாவிற்கு பயன்படுத்தும் பொம்மைகள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2024 03:06
காரைக்கால்; காரைக்காலில் மாங்கனி திருவிழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும்பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.எனவே வரும் 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் 20ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் திருகல்யாணம்.மாலை வெள்ளை சாத்தி புறப்பாடு, 21ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும். மாலை அமுது படையல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.இத்திருவிழா தொடர்ந்து 30நாட்கள் நடைபெறும். 1மாதம் நடைபெறும் மாங்கனி திருவிழா நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தடுக்கப்பட்டு வாகனங்களை திருப்பிவிடப்படும்.சாலையின் இருபக்கத்தில் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்படும். அதேபோல் விழாவின் போது ஊர்வலத்தில் பிச்சாண்டவ மூர்த்தி பயன்படுத்தும் பவழக்கால் மண்டபத்தில் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.மேலும் விழாவையொட்டி பக்தர்கள் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் தீவிராக ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.