Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ருத்ரேஸ்வரர் கோவிலில் ... கோவில்களின் சொர்க்கம் லக்குன்டி கிராமம்..! கோவில்களின் சொர்க்கம் லக்குன்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாக தோஷம் நீக்கும் ஜுவாலமுகி அம்மன்
எழுத்தின் அளவு:
நாக தோஷம் நீக்கும் ஜுவாலமுகி அம்மன்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
11:06

மைசூரு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, சாமுண்டி மலையில் இருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தான். ஆனால் மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனின் தங்கையான ஜுவாலாமுகிக்கும் கோவில் உள்ளது.

மைசூரில் இருந்து, 12 கிலோ மீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது உத்தனஹல்லி கிராமம். இந்த கிராமத்தில் ஜுவாலமுகி திரிபுர சுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சாமுண்டி மலைக்கு சென்று சாமுண்டியை தரிசித்து, அதன் பின்னர் அவரது தங்கையான ஜுவாலமுகி திரிபுர சுந்தரி அம்மனையும் தரிசித்தால் நல்லது நடக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். பீஜாசுரன் என்ற அரக்கன் உடலில் இருந்து வலியும், ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அசுரர்கள் தோன்றினர். அசுரர்களை பயன்படுத்தி தேவர்களையும், ரிஷிகளையும் யாகம் நடத்த விடாமல் தடுத்தான் பீஜாசுரன். இதனால் உலகத்தில் தாயான பார்வதியிடம் தேவர்களும், ரிஷிகளும் முறையிட்டனர். உக்கிர ரூபத்துடன் நாக்கை நீட்டியபடி கோரை பற்களுடன், ஜுவாலமுகி அவதாரத்தில், அசுரனுடன் போரிட்டு அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை, ஜுவாலமுகி அம்மன் குடித்தார். பின்னர் அசுர வதம் செய்த பாவம் நீங்க, சிவனை வழிபட்டு பாவத்தை நீக்கினார்.

கோவிலில் நாக்கை நீட்டியபடி கோபத்தோடு காட்சி தரும், அம்மனின் கைகளில் திரிசூலம், உடுக்கை ரத்தம் குடிக்கும் பாத்திரம் உள்ளது. உற்சவ அம்மனின் முகம் சாந்தமான நிலையில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில், இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட்டால், சர்ப்ப தோஷம், நாக தோஷம் விலகும். பவுர்ணமி அன்று எலுமிச்சை தீபம் ஏற்றினால் திருமண தடை நீங்கும். இந்த கோவிலுக்குள் விநாயகர், முருகர், காலபைரவர், நாகபைரவர் ஆகிய சுவாமிகளின் சன்னிதியும் உள்ளது. ஆடி பவுர்ணமி, நவராத்திரி, மகா சிவராத்திரி, சனி பிரதோஷம் இக்கோவிலில் விசேஷ நாட்கள் ஆகும். தினமும் காலை 7:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும், மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், கோவில் நடை திறந்திருக்கும்.

மேலும் விபரங்களுக்கு சதாசிவா என்பவரின் 97399 80255 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar