Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை; ... ராமேஸ்வரத்தில் மகாராஷ்டிரா பக்தர்கள் தையல் மிஷின் நன்கொடை ராமேஸ்வரத்தில் மகாராஷ்டிரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2024
05:06

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே நடைபெற்ற மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 11:15 மணிக்கு நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 17 ல் விக்னேஷ்வர் பூஜை, மகா கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று தீப ஆராதனை மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மறுநாள் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று காலை 7:15 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை 9:15 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி தீபாரதனை நடைபெற்றது. பின்பு, சிவாச்சாரியார்கள் சந்திரசேகர் மற்றும் மணிகண்ட குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை ஊர்வலமாக எடுத்துச் சென்று, காலை 11:15 மணிக்கு கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு, புனித நீர் மூலம் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், மோர்ப்பண்ணை கிராம தலைவர் ராஜதுரை, முன்னாள் கிராம தலைவர் துரை.பாலன், கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பாலன், துணைத் தலைவர் சேவியர், ஊராட்சி செயலாளர் ஆண்டனி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாக கமிட்டி யினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் தொடர்ச்சியாக இன்று பகல் 12:00 மணிக்கு பாய்மர படகு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கிராம மீனவ பட்டங்கட்டியார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar