ஞான ஈஸ்வரர் கோவிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2024 10:06
கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் இருக்கும் ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ ஞான ஈஸ்வரர் கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வாராகி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.