வானுார்; குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. இக்கோவிலில் 3ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ம் தேதி முதல் தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. 23ம் தேதி பல்லக்கு வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளச் செய்தனர். பின், 9:00 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நாளை 27ம் தேதி தீர்த்தவாரி மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.