ஆதி சிவன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு ; வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2024 12:06
கோவை ; கோவை - பொள்ளாச்சி ரோட்டில் ரத்தினம் கலைக்கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர்.