ஆனி வெள்ளி; சுந்தராபுரம் துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2024 03:06
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் நீல வஸ்திரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை தரிசனம் செய்தனர்.