Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி; தாடிக்கொம்பு சொர்ண ... சென்னையில் பத்ராசல ராமர், வெண்ணையால் உருவாக்கப்பட் அனுமார் தரிசனம்; பக்தர்கள் பரவசம் சென்னையில் பத்ராசல ராமர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் பழமையான கோயில்களுக்கு பக்தியுடன் பயணிப்போமா! கண்டு கொள்ளுமா சுற்றுலா வளர்ச்சி கழகம்
எழுத்தின் அளவு:
மதுரையில் பழமையான கோயில்களுக்கு பக்தியுடன் பயணிப்போமா! கண்டு கொள்ளுமா சுற்றுலா வளர்ச்சி கழகம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2024
04:06

மதுரை : மதுரையில் வைகை ஆற்றங்கரையோரத்தை ஒட்டி பழமையான கோயில்கள் இருப்பதால் அவற்றை ஒருநாள் ஆன்மிக சுற்றுலா திட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிக்க வேண்டும்.


மதுரை கோச்சடை ரோட்டில் சென்றால் துவரிமானில் இருந்து வைகை ஆற்றங்கரையின் அதிசய கோயில்களை தரிசிக்கலாம். கிருதுமால் நதியின் உற்பத்தி மையமான துவரிமானில் இருந்து இருபக்கமும் வயல்வெளிகளின் அழகை ரசிக்கலாம். மேலமாத்துாரில் சிவன் கோயில், கொடிமங்கலம், திருவேடகம், சோழவந்தான், தென்கரை, குருவித்துறை வரை வழிநெடுக சிவன், பெருமாள் கோயில்கள் உள்ளன. திருவேடகம், சோழவந்தான், தென்கரை, குருவித்துறை கோயில்கள் தெப்பக்குளமும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன்கோயில்கள் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது மதுரையின் பெருமை.


இந்த கோயில்கள் செல்லும் வழியில் மேலக்கால், திருவேடகம் பகுதியில் வாழை நார் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு கூடம் உள்ளது. சோழவந்தான், முள்ளிப்பள்ளத்தில் தென்னந்தோப்புகளையும் தென்னையில் இருந்து வெல்லம் தயாரிப்பு, நாரிலிருந்து தோட்டப்பொருட்கள் தயாரிப்பு கூடத்தையும் பார்வையிடலாம். புவிசார் குறியீடு பெற்ற சோழவந்தான் வெற்றிலை கொடிக்கால்களை பார்வையிடலாம். ஆன்மிகத்தோடு கிராமத்து அழகையும் ஒருசேர அனுபவிக்கும் இடமாக துவரிமான் முதல் சோழவந்தான் வரை உள்ளதால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்த இடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல நரசிங்கம் கோயில், திருமோகூர், திருவாதவூர் பெருமாள், சிவன் கோயில்களுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இருந்து ஒருநாள் செல்லும் வகையில் புதிய சுற்றுலா திட்டத்தை கொண்டு வரலாம். மதுரையில் ஆடி அம்மன் கோயில் சுற்றுலா பிரபலமான நிலையில் துவரிமான் - சோழவந்தான், நரசிங்கம் - திருமோகூர், திருவாதவூர் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar