Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி ... டி-20 உலக கோப்பை; இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் வழிபாடு டி-20 உலக கோப்பை; இந்திய அணியின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:
தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோரிக்கை

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2024
02:06

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோரி, ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவையினர் மடியேந்தி பிரார்த்தனை செய்தனர்.


பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பல ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறாமல் உள்ளது. சில தினங்களுக்கு முன், தெய்வீக பக்தர்கள் பேரவையினர், கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என சைவ, வைணவ பாகுபாடின்றி, அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று காலை, பிரம்மோற்சவம் நடத்த, பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என, மேலவீதயில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து, மடியேந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், வெற்றிலை பாக்குடன் கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினர். நிகழ்ச்சிக்கு, தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் சம்மந்தமூர்த்தி, ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் ரகோத்தமன் முன்னிலை வகித்தனர். சிறப்பு பூஜையை பத்ரி நாராயணன் பட்டாச்சாரியார் செய்தார். நிர்வாகிகள் பட்டாபிராமன், செல்வகுமார், விஜயகுமார், டிரைவர் முருகன், பரணி, பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். தெய்வீக பக்தர்கள் பேரவை மாநில பொதுச் செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar