பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
11:07
ஸ்ரீகாளஹஸ்தி, சித்தூர் மாவட்டம் சௌடேப்பள்ளி மண்டலம் போயகொன்ட கங்கையம்மன் தேவஸ்தானத்தில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் சனிக்கிழமை எண்ணப்பட்டது. இதில் கடந்த 65 நாட்களுக்கு தேவஸ்தானத்தின் வருமானமாக ரொக்கப் பணம் ( ரூ. 1,16,21,723.00,) ஒரு கோடியே பதினாறு லட்சமத்து இருப்பத்தோராயிறுத்து எழுநூற்று இருப்பதற்கு மூன்று ரூபாய், தங்கம் 60 கிராம், வெள்ளி 1 கிலோ 220 கிராம், அமெரிக்க டாலர் -1 நோட்டு, அமெரிக்க டாலர் - 4 ஓமன் - 100 பைசா-3 நோட்டுகள், மலேசியன் ரிங்கிட் 1 டிரினிடாட் & டோபா 20 டாலர் - 1 நோட்டு, டிரினிடாட் & டொபாகோ 10 டாலர் மற்றும் ஸ்ரீ ரணபேரி கங்கையம்மன் கோயிலில் ரூ. 78,829.00 வந்திருந்ததாக தேவஸ்தான செயல் அலுவலர் சந்திர மௌலி,கோவில் தலைமை அர்ச்சகர்கள், துணை கோயில்களின் செயல் அலுவலர் ஒய்.முனிராஜா, சௌடேபள்ளி காவல் துறையினர், பட்னப்பள்ளி சௌடேப்பள்ளி ராஜண்ணா, ஐசிஐஐசி வங்கி அதிகாரிகள் பட்னப்பள்ளி மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.