கிண்டி; கிண்டி, மாங்குளம், எம்.கே.என்.சாலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்தன. கடந்த 5ம் தேதி, யாகசாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள், காலபூஜைகள் நடந்தன. நேற்று காலை, புண்ணியாகவசாம் பாலிகா, துவார, குபேர பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அனைத்து கோபுர சன்னிதிகளுக்கும் கும்பநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.