ஒரத்துார் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 10:07
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை மற்றும் அபிஷேகங்களை திருவாமாத்துார் ஈசான சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.