தமிழக கோயில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது?ஏதேனும் திட்டம் உள்ளதா? உச்சநீதிமன்றம் கேள்வி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 01:07
தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோயில் நிதிகளில் முறைகேடுகள் நடக்கிறது. பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்க வில்லை. கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை திரும்ப வழங்க வேண்டும் என ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இது குறித்து உச்சநீதிமன்றம் கூறியதாவது; தமிழக கோயில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? உண்டியல் காணிக்கை, நிதியை செலவிட ஏதேனும் திட்டம் உள்ளதா? சமூக நல திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்தினால் பிரச்னை இல்லை; சொகுசு காரியங்களுக்காக நிதியை அரசு பயன்படுத்தினால் தவறு எனவும் தெரிவித்துள்ளது.