Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; நாளை ... 46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட புரி கோவில் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களுக்கு ரூ.656 கோடி வரி விதிப்பு: கொலையினும் கொடூர செயல்
எழுத்தின் அளவு:
கோவில்களுக்கு ரூ.656 கோடி வரி விதிப்பு: கொலையினும் கொடூர செயல்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
11:07

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், நேற்று நடந்த அனைத்து ஆன்மிக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் கூட்டத்தில், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறியதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறையினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதர்ம காரியங்களில் ஈடுபட்டு, அதிகப்படியான செலவு கணக்குகளை காட்டி வருகின்றனர். கோவில்களை லாபம் ஈட்டும் வியாபார தலங்களாக மாற்றி விட்டனர். அறநிலையத்துறை கோவில்களுக்கு, கடந்த ஆட்சியில் ஆண்டுதோறும் நிர்வாக வரி என, 420 கோடி, ஆடிட் வரி என, 127 கோடி ரூபாய் வசூல் செய்தனர். இந்த அரசு, நிர்வாக வரி, 428 கோடி ரூபாய், ஆடிட் வரி, 228 கோடி ரூபாய் என, 656 கோடி ரூபாய் வரி வசூல் செய்கிறது.


கோவிலுக்கு அரசு வரி விதிப்பது என்பது கொலையை காட்டிலும் ஒரு கொடூரமான செயல். தமிழகத்தில், சைவ, வைணவ மடங்களுக்கு சொந்தமான கோவில்களையும், நிலங்களையும் தன் பிடிக்குள் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. பக்தர்களின் நிதியில் நிர்வகிக்கப்படும் கோவில்களில், சிலரது பிறந்த நாளில் சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கண்டெடுக்கப்பட்ட சுவாமி திருமேனிகள், வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட தெய்வத்திருமேனிகள் தமிழகத்தில் பல உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்த கோவில்களுக்கு வழங்கி பூஜை நடத்தியும், பக்தர்கள் வழிபடவும் அனுமதிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு பின், மீட்கப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் உள்ள ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழகத்தில் பழமையான கோவில்களுக்கான புனரமைப்பு நிதிகளை முழுமையாக ஒதுக்கீடு செய்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் களவுபோன தொன்மையான தெய்வத்திருமேனிகள் உலகின் பல அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar