Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ... ஸ்ரீதேவி, பூதேவியருடன் பூ பல்லக்கில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்; பத்ரகாளியம்மனை தரிசித்து பரவசம்
எழுத்தின் அளவு:
மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்; பத்ரகாளியம்மனை தரிசித்து பரவசம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2024
10:07

திருப்புவனம்; ஆடி வெள்ளியை முன்னிட்டு மடப்புரத்தில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலிற்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் ஆடி மாதங்களில் அம்மனை வழிபட்டால் வேண்டிய வரம் தருவாள் என்பது நம்பிக்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உச்சி கால பூஜையில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். மதியம் ஒரு மணிக்கு விநாயகருக்கு பூஜை செய்த பின் அடைக்கலம் காத்த அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஐந்து முக தீபம் காட்டப்பட்டது. பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கின. மதியம் ஒரு மணிக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது பெண்கள் பலரும் அருள் வந்து ஆடினர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டிருந்தது. முதியோர்கள், மாற்றுதிறனாளி பக்தர்கள் தனி வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் திருப்புவனத்தில் இருந்து மடப்புரம் வரை மினி பஸ் நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் கட்டணத்துடன் இயக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஷேர் ஆட்டோ, டூவிலர் உள்ளிட்ட வற்றை குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அனுமதிக்கவில்லை. மின் பஸ் கோயில் வாசல் வரை சென்றதால் பெண் பக்தர்கள் பலரும் மினி பஸ்சில் விரும்பி பயணம் செய்தனர். ஆடிவெள்ளி உள்ளிட்ட விசேச தினங்களில் அம்மனுக்கு கிரீடம் அணிவிக்கப்படும், ஆடி முதல் வெள்ளியான நேற்று அம்மனுக்கு கிரீடம் அணிவிக்கப்படாதது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar