திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக, 3.46 கோடி ரூபாயை செலுத்தி உள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாத பவுர்ணமி கடந்த, 21 ம் தேதி முடிந்த நிலையில், நேற்று கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், பக்தர்கள், 3.46 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 305 கிராம் தங்கம், 1,492 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியிருந்தனர்.