காரைக்கால் தங்கமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2024 04:07
காரைக்கால்; காரைக்காலில் தங்கமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையை முன்னிட்டு சந்தனகாட்டு அலங்காரம் நடந்தது. காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள தங்க மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக தங்கமாரியம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் தங்கமாரியம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் 100க்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன்,கோவில் நிர்வாக அதிகாரி சரவணன் உள்ளிட்ட சிவலோக நாதசுவாமி தேவஸ்தானம் நிர்வாகிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.