திருச்செந்தூரில் ஆடிக்கிருத்திகை விழா; அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 12:07
திருச்செந்தூர் ; தமிழகத்தில் பிரதான முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை இன்று கொண்டாடப்படடுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (30ம் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனாலும் பக்தர்கள் அதிகளவில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. குரு ஸ்தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. சுவாமி சிறப்பு அர்ச்சனை, அலங்காரம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கடலில் நீராடி காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது.