Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் ஆடிக்கிருத்திகை ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் துவக்கம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை; வடபழநி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. அரோகரா கோஷத்துடன் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2024
12:07

வடபழநி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழநி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.


Default Image

Next News

ஆடி கிருத்திகை விழா, வடபழநி முருகன் கோவிலில், வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வடபழநி முருகன் கோவிலில், ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறும். ஆடி கிருத்திகை முன்னிட்டு இக்கோயில் நடை இன்று(29ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு பள்ளியறை பூஜை முடித்து 4 மணி முதல் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. 5 மணி முதல் பொதுமக்களுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 


ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து, கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி, வடபழநியைச் சுற்றியுள்ள பகுதிகளான விருகம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் என, பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள், பால் காவடி எடுத்து வந்த நிலையில், மற்ற பக்தர்கள் புஷ்ப அலங்காரம், பன்னீர் மற்றும் அலகு காவடிகளை எடுத்து வந்தனர். அலகு குத்தி தேர் இழுத்து பிரார்த்தனையை பக்தர்கள் நிறைவேற்றினர். பக்தா்கள் கூட்டத்தை கட்டப்படுத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது தரிசனம், கட்டண தரிசனத்துக்கான பக்தா்கள் தெற்கு நுழைவாயில் வழியாக அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முதியோா் கா்ப்பிணி, கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் தெற்கு நுழைவாயில் சாலை வழியாக வந்து இடதுபுறம் திரும்பி மேற்கு நுழைவாயில் வழியாக தனி வழியில் வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பால்குடம் ஏந்தி வருவோா் காவடி, அலகு குத்தி வருவோா் தெற்கு நுழைவாயில் சாலை வழியாக வந்து மேற்கு கோபுரம் நுழைவாயில் வழியாக உள்ளே வந்து அவா்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் சுவாமி தரிசனம் செய்யலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar