திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உற்சவ மூர்த்தி மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 7 மணிக்கு, அம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரிகள் வேதங்கள் முழங்க, மேளதாளத்துடன் கொடியேற்றப்பட்டது. தங்க கொடி மரம் முன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மன் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், மற்றும் பராசக்தி அம்மன் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.