பதிவு செய்த நாள்
29
ஜூலை
2024
01:07
மதுரை: முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா, தமிழகம் முழுவதும் இன்று, வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானுக்கு, ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டது.
தை கிருத்திகை, தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விழாக்கள் முருகனை வழிபட முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. அந்த வகையில், ஆடி கிருத்திகை தினம் மிகவும் விசேஷமாக, இன்று தமிழகம் முழுவதும் உள்ள, முருகன் கோவில்களில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை விழா ஆடிக்கிருத்திகை விழாவாக கொண்டாடப்படுகிறது. இன்று கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து வருகின்றனர். சென்னையில் வடபழனி, கந்தக்கோட்டம், அறுபடை வீடு, திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்துார், சிறுவாபுரி, வல்லக்கோட்டை, மயிலம் மற்றும் அறுபடை வீடு தலங்களிலும், மற்ற முருகன் கோவில்களிலும், ஆடி கிருத்திகை விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை உள்ளது. இக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நடந்த பூஜையின்போது, மூலவர் முத்துமலை முருகன் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவில்களில் விடியற்காலை முதல், இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. அத்துடன், மூலவருக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்களும் நடைபெற்றது. பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் முருகப் பெருமானை வழிபட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற தலங்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.