திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கார்த்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2024 11:07
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது.