Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வடவள்ளி வீர மாத்ரே அம்மன் கோவிலில் ... நாங்குனோி வானமாமலைப் பெருமாள் கோவிலில் ஆடிப்பூரஉற்சவம் நாங்குனோி வானமாமலைப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் ; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
சென்னை கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் ; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

07 ஆக
2024
12:08

சென்னை; அம்மனுக்கு உகந்த நாட்களில் ஆடிப்பூரம் திருநாளில், கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு முற்பகல் 11:00 மணிக்கு, மஞ்சள்காப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. உச்சிகால அபிஷேக அலங்காரம் நடந்தது. சாய்ரக் ஷை பூஜையின் போது, மஞ்சள் காப்பு அலங்காரம் செய்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, 150 டஜன் வளையல்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. பின், ஆறடி உயரத்திற்கு வளையல் மாலை சார்தப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பெண் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் உள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கிருத்திகை சபை சார்பில் 108 குத்துவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.


திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு - ஊஞ்சல் சேவை நடக்கிறது.


கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தில், உற்சவ தாயார் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவையில் அருள்பாலிக்கிறார்.


திருவுடைநாதர் சமேத திருவுடைநாயகி கோவிலில், மாலை 5:30 மணிக்கு ஆடிப்பூரம் நிகழ்வு- ஊஞ்சல் சேவை, திருவிளக்கு பூஜை நடக்கின்றன.


அதேபோல, பள்ளிக்கரணை வீராத்தம்மன் கோவில், மதுரா நாராயணபரம் நாகாத்தம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar