Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் யோக நரசிம்மருக்கு ... மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் ஆடி சுவாதி மகாருத்ர யாகம் மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குருபூஜை
எழுத்தின் அளவு:
அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குருபூஜை

பதிவு செய்த நாள்

11 ஆக
2024
08:08

அவிநாசி; அவிநாசி ஸ்ரீகருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில்,தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் 91வது குருபூஜை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் வரும் நாளை குருபூஜை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவிநாசி பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குருபூஜை பெருவிழா நடைபெற்றது. இதில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை மற்றும் சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராண வரலாற்றை முறைப்படி பண்ணொன்ற முற்றும் ஓதுதல் முறையில் திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவ மூர்த்திகள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர். முன்னதாக செல்வ விநாயகர், பாதிரி மரத்தம்மன், ஸ்வாமி, அம்பாள், சுப்ரமணியர், நால்வர் பெருமக்கள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்வாமி அம்பாளுடன் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் உடன் நான்கு ரத வீதியிலும் திருவீதி உலா நடைபெற்றது.

அதன் பின்னர் மாலையில் வெள்ளை யானை வாகனத்தில் சுந்தரர், குதிரை வாகனத்தில் சேரமான் பெருமான் நாயனார் திருவீதி வலம் வந்து இறைவனடி பற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்து கொண்டு காலை ஏழு மணி முதல் மாலை 7 மணி வரை ஓதுவா மூர்த்திகளுடன் பாராயணம் செய்தனர். 91வது குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 
temple news
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar