Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரம்பரியம் மாறாத மஞ்சள் தண்ணீர் ... அமெரிக்காவில் அயோத்தி கோவில் ரத ஊர்வலம்; ஏராளமானோர் பங்கேற்பு அமெரிக்காவில் அயோத்தி கோவில் ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் ஆரம்பம்; வரும் 22ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் ஆரம்பம்; வரும் 22ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2024
10:08

இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம், கோ பூஜை அதனைத் தொடர்ந்து மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 10நாட்கள் பொங்கல் விழா நடைபெறும்.இந்த விழா நாட்களின் போது தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்று வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த சில வருடங்களாக பணிகள் நடைபெற்று வந்து முடிவுற்றதை தொடர்ந்து வருகிற ஆக. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயில் முன்பாக யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை கோயில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகின. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது பின்னர் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து 3 நாள்கள் 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிற 22ம் தேதி காலை 8:00மணியிலிருந்து 9:15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்,விழா கமிட்டியினர், கோயில் பணியாளர்கள்,கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar