Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் ஆரம்பம்; வரும் 22ல் கும்பாபிஷேகம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரியம் மாறாத மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா; முறை மாமன்கள் மீது நீர் ஊற்றி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பாரம்பரியம் மாறாத மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா; முறை மாமன்கள் மீது நீர் ஊற்றி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2024
10:08

மானாமதுரை; மானாமதுரையில் கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு 152 ஆண்டுகளாக பாரம்பரியம் மாறாமல் முறைப்பெண் முறை மாமன்கள் மீது உறவினர்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் 156ம் ஆண்டு பொங்கல் முளைப்பாரி உற்சவ ஆடித்திருவிழா கடந்த 9ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் ஏந்தி,அழகு குத்தி பூக்குழி இறங்கும் விழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது.இதனை தொடர்ந்து அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று முன் தினம் மாலை 300க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி ஓடுகளை தூக்கிக்கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து அலங்கார குளத்தில் கரைத்தனர். நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து கண்ணார் தெரு பகுதியில் தொடர்ந்து 152 ஆண்டுகளாக பாரம்பரியம் மாறாமல் முறை பெண்கள் மீது முறை மாமன்களும்,முறை மாமன்கள் மீது முறைப்பெண்களும் மாறி, மாறி மஞ்சள் தண்ணீரை ஊற்றியும், முகத்தில் மஞ்சள் பொடியை தடவியும் விழாவை கொண்டாடினர். இத்திருவிழாவிற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த உறவினர்கள் தங்களது முறை பெண்கள் மற்றும் முறை மாமன்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி சந்தோசமாக விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா அக்கசாலை, அன்னதான பிள்ளையார் அறக்கட்டளை, இளைஞர் பேரவை,அன்னதான குழுவினர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar