சிவகாசி; சிவகாசி நாமத்வாரில் கோகுலாஷ்டமி உற்சவம் நடந்தது. ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிஜி சீடர் பிரம்மஸ்ரீ ஸ்ரீனிவாசன் பாகவதர் பாகவத பாராயணம், கதை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். காலை, மாலையில் சுவாமி பல்லக்கில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பீஜ தானம், பிரசாதம் வழங்கப்பட்டது.