சென்னம்பாளையம் எமதர்மர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2024 02:09
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, சென்னம்பாளையத்தில் உள்ள எமதர்மர் கோவிலில், ஆவணி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு எமதர்மருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்யப்பட்டது. கோவில் பூசாரி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். அமாவாசை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சிகள், பவானி ஆற்றின் கரையோரம் நடந்தன. அதேபோன்று மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில், தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணமும், திதியும் வழங்கினர்.